சாபம்



உருப்படமாட்டான்
எனக்கப்  பயல
அடிச்சவனுக்க  கையில
நீக்கம்பு பிடிச்சு
அவன் குடும்பம்  வேரற்று, குற்றிமுட்டி
அவன் படிய  பாட பாரு .

தல போற தப்பா  செஞ்சான்
மற்றவனுக்க பெண்ண ஸ்னேஹிச்சாண்டு
இப்படி எடுத்திட்டு தல்லி
இடிச்சு சதச்சு பிளிஞ்சு  விட்டானுவ
வாயில மண்ணு விளுந்தவனுவ

இப்படியொக்க  செய்ய
என்னம்பா இவன்மாருக்கு
மனசு  கேட்டது .

நெல்லு வாலு  போல
கோரம்  பாயில கெடக்கிய
எனக்க  மோனுக்கு
வெளிப் பருத்தியும் முட்டையும்
கொடுத்துப்   பாக்கிலாம்        
நேரம்  வெளுக்கட்டு .

ஆர். ஆல்பன் 

Comments