ஓய்வு
அங்கும் இங்குமாய்
ஓடி விளையாடிய மைதானம்
வெறிச்சோடிக் கிடக்கிறது
கோடை மரங்களின் இலைகளுடன் .
யாரும் வருவாரில்லை
அறைகள்
அடைபட்டு கிடக்கிறது
சிலந்தி வலைகளுடன் .
மதிலை விட்டு வெளியேறுகின்றன
ரசிப்பதற்கு எவருமில்லாததால்
பூக்கள்.
லேசான தென்றல்
மரங்களின் சலனம்
ஓய்ந்திருந்தது அதிகாலையில்
சப்தமிட்டு க் கொண்டிருந்தது பறவைகள் !
மௌனங்கள் மட்டும்
அனுசரிக்கப்பட்டது இரவுகளில்...
வெற்றிடமாக்கி விட்டது
பள்ளி விடுமுறை
என் மனதை மட்டுமல்ல...
Comments
Post a Comment