செங்கல்லு சுள்ள


என்னவாக்கும்  பாவம்
செத்து ஒண்ணும் போவ  மாட்டோம்
வேல செஞ்சா.

நெலம வந்திருக்காது
இப்படி கெடந்து ஓட
கெட்டினவனோ அப்பனோ
எடுத்து தின்னக்  கணக்கா
உண்டாக்கி  இட்டிருந்தா .

போவேண்டாம் பில இனி
அஞ்சு வர படிச்சது மதி
படிச்சு என்ன வேல கிட்ட போவுது .

திலிஞ்சு பாக்க  மாட்டினும்
பட்டினி கெடந்தாலும்
குடும்ப  கார  யாரும்
பணம் இல்லாத்தாண்டு .

கெட்டினவன் செத்த
பதினாறு தொட்டு
போவ தொடங்கியாச்சு
எனக்க இந்த 
பயலையும்  கொண்டு
சுள்ள பெரைக்கு.     

Comments