நாலு எழுத்து படிக்க போய்
தாறு மாறாட்டு
அடிச்ச வேதனையும்
தீரல்ல இதுவரைக்கும் .
இருட்ட வெளுக்க
குத்தியிருந்து படிச்சும்
ஒண்ணும் நிக்குதில்லை மனசில.
நாலு எழுத்து
படிச்சாத இருந்தா
நாள ஒருகாலம்
பஸ்க்க போடு பாக்கவும்
தெண்ட வேண்டியது வரும்
பலரும் சொல்லினும் அடிக்கடி .
அப்பனும் அம்மையும் தொலஞ்சும்
படிக்க ஆசப்பட்டு
பள்ளிக்கு போனா
படிக்கிறவனுக்கு தான்
சொல்லிக் கொடுக்கிறாரு டீச்சர் .
எ துக்கில வாறேண்ணு
கேக்கிறதுக்கு பதிலா
அடிக்கிறதுக்கு பதிலா
சொல்லித் தந்திருந்தா
என்னாலையும் வாங்கியிருக்க முடியும்
பஸ்ட் மார்க்கிண்ணு
இப்பவும் தோணுது
ஆர். ஆல்பன்
Comments
Post a Comment