பரிசல்
என் பயணங்கள்
நிலையற்றதாகி விடுகின்றன .
உதயங்களில்லாமல் போன
வாழ்க்கையைப் போல
கவிழ்க்கப் பார்க்கும்
அலைகள் .
கோபக் கூக்குரலிட்டுக்
துரத்தும் திசையில்
என் நினைவுகள் கலையும்.
நிழல் யாவும்
மரக்கிளைகள்
இல்லாமல் போன கரையில்
நீந்தி களைத்து கரையேற
ஒரு குடை
தன் தலை மறைத்தவாறு
பக்கம் வருகிறது .
ஆர்.ஆல்பன்
Excellent
ReplyDelete