நெஞ்சினலைகள்
வார்த்தைகளால் வானுயர்ந்த
வள்ளுவரும் சிலையாய்
அலைகளின் நடுவே
அன்பைப் போதித்த
விவேகானந்தருக்கு ஆசிரமம்
சமாதிக்குள்ளேயும்
காந்தியின் நாட்கள்
திறப்பு விழா கனவுடன்
காமராஜர் மணி மண்டபம்
முத்தமிட்டு சங்கமிக்கும் முக்கடற்கரையில்
இனியும் வரலாம் பல பேர் .
இவர்களை நம்பிய தொழிலால்
பசியாறி விடுகின்றன பொழுதுகள்
விடியாத ஒரு இரவின் விளிம்பில்
மோதி மோதி சிதைக்கப் பார்க்கும்
அத்தனையும் மீறி
உயர்ந்து எழுகிறது அலை
பிரளமான என் மனசின் உள்ளேயும் ........
ஆர். ஆல்பன்
Comments
Post a Comment