சிறகுகள்


சிறகுகள்  இருந்தும்
பறந்து பார்க்க  முடியவில்லை .


வான் மீது  உலா  வர
பூமி மீது  விரல் பதிக்க
விடுவதில்லை  ஆளுமைகள் .

அடிக்கடி
வெட்டப்படுகின்றன  சிறகுகள்
நிலைத்திருக்கவும்
நிஜம் உதிர்க்காமலிருக்க .

ஒடுக்கங்களுக்கு  அடங்கி
வதைகளுக்கு  அஞ்சி
முடங்கி விட போவதில்லை  யென
வெளியேறி வரும்   வேளை
நிந்தையின் சித்ரவதைகளுடன் 
கழுத்துக்கு தாலி .
ஆர். ஆல்பன்   

Comments