சாரல் துளிகள்
பரந்து விரிந்து கிடக்கும்
வானில் வலம் போகும்
கார் முகிலால் உருவாக்கப்பட்ட சாரல்கள்
காற்றின் சீற்றத்துக்குப் பயந்து
கலைந்து தூரம்போய்
நிலம் பாதிக்கிறது
தன் விரல்களை .
புறம் உதறி தள்ளி
ஓடிய திசைகளில் ஓடி வருகிறது
முகம் நனைத்து
பச்சைப் புல்வெளிகளை
காடு மலைகள்
கடல்களின் நினைவுகளில்
பிறப்பெடுத்து கனிந்து
மழை ஓய்ந்த மறுகணம் தொட்டு
நினைவுகள் சொட்டும்
ஒரு மரமாய் ஆனது
என் வாழ்க்கை .
ஆர். ஆல்பன்
Comments
Post a Comment