சிறகடிக்க சிறகில்லை
விபரம் தெரியாத நாட்களில்
யாருக்கும் தெரியாமல்
வெளியேறி வந்ததுண்டு
பள்ளியை விட்டு வீட்டுக்கு.
பள்ளிக்கு போவது
விருப்பம் இல்லாமல்
சின்ன வயதில் .
இப்ப படிக்க விருப்பப்பட்டு
பனிரெண்டாம் வகுப்பில்
நல்ல மதிப்பெண் வாங்கிய பின்னும்
முற்றுப் புள்ளியானது
மேல் படிப்பு .
வீட்டை விட்டு
வேலை தேடி
வெளிநாடு போய் திரும்பிய
அப்பாவின் கடன்களால் .
வெட்டப்பட்டது
கல்லூரியை நோக்கி
பறந்துக் கொண்டிருந்த
என் மனசின் சிறகுகள்.
ஆர்.ஆல்பன்
Comments
Post a Comment