கனவுகள் நிலைப்பதில்லை
கண்ணெதிரே மேகங்கள் .
சொக்கச் சுமையுடன்
ஓயாமல் தாலாட்டும்
அலை
கட்டிய வீட்டை
கலைத் தெறினும் தொடரும்
நண்டுகளின் நொண்டி பயணம்
உப்பு நீரில்
விழி மீன்கள் .
நித்திரை இரவுகளில்
நிம்மதி இல்லாமல்
சொக்கி திரியும் திரியும் மனங்கள்.
நாளைய நம்பிக்கையுடன்
நிமிரும்
மனங்கள் எத்தனையோ .
ஆர்.ஆல்பன்
Comments
Post a Comment