அவர்களுக்காக...

வானைக்  கிழித்து அம்பாய்
இறக்கை விரித்து பறக்க
ஆசைகள் முடமாய் ...

கழுகுக் கண்களில்  கொடூரம்
தவழ்ந்து பறக்கப்  பார்க்க
தகர்த்து சிதறும் பொடியாய் ...

பறந்து பார்க்கிறது மனம்
எல்லாம் மறந்து
இறக்கை இல்லாமல் ...

சோக சுமைகள் முதுகில்
சோலை வனத்தில்
நினைவுகள் பழையனவாய் ...

பச்சோந்தியாய் மனித
நிறங்கள் குணங்கள்
நிஜங்களை நோக்க நிழல்கள்...                                                                          

                                                                                                        ஆர்.ஆல்பன் 


Comments

Post a Comment