Posts

பரிசல்

காற்றின்  கைகளிலாடும்  என்  பயணங்கள் நிலையற்றதாகி  விடுகின்றன . உதயங்களில்லாமல் போன வாழ்க்கையைப்   போல கவிழ்க்கப்  பார்க்கும்  அலைகள் . கோபக்  கூக்குரலிட்டுக்   துரத்தும் திசையில் என் நினைவுகள் கலையும். நிழல்  யாவும் மரக்கிளைகள் இல்லாமல்  போன கரையில் நீந்தி களைத்து கரையேற ஒரு குடை  தன் தலை மறைத்தவாறு பக்கம்  வருகிறது . ஆர்.ஆல்பன்   

யதார்த்தம்

முகம் நிமிர்த்தி  யறைந்து திருப்பி திருப்பி தகர்த்திருக்கலாம் . எதிர் பாராத  விதமான தாக்குதல்களால் நிலை குலைய  வைத்திருக்கலாம் . பீறிட்டு கண்ணீர் கசிவதை பார்க்க விரும்பியதால் பொறுமைக்கெதிராய் எழுந்திருக்கலாம் . பத்திரமாய் என்னிடம் அடக்கி வைக்கப் பட்ட புன்னகை  மட்டும். கேட்டு விட வில்லை எதைப்  பற்றியும் ... எங்கள்  பிணைப்பு அகன்று  கழன்று  நிமிஷத்தில் தூரமாகவிடக்   கூடுமென்பதால் . ஆர். ஆல்பன்       

நெஞ்சினலைகள்

வார்த்தைகளால்  வானுயர்ந்த வள்ளுவரும்  சிலையாய் அலைகளின் நடுவே அன்பைப்  போதித்த விவேகானந்தருக்கு ஆசிரமம் சமாதிக்குள்ளேயும் காந்தியின் நாட்கள் திறப்பு விழா கனவுடன் காமராஜர்  மணி மண்டபம் முத்தமிட்டு  சங்கமிக்கும்  முக்கடற்கரையில் இனியும் வரலாம் பல பேர் . இவர்களை  நம்பிய  தொழிலால் பசியாறி  விடுகின்றன  பொழுதுகள் விடியாத ஒரு இரவின் விளிம்பில் மோதி  மோதி  சிதைக்கப்  பார்க்கும் அத்தனையும்  மீறி உயர்ந்து எழுகிறது  அலை பிரளமான  என் மனசின் உள்ளேயும் ........ ஆர். ஆல்பன்        

என்னுலகம்

எதிர்பாராத  விதத்தில் வெடிக்கும்  கலவரம் பீதியுடன் சிதறி  ஓடும் மனிதர்கள் வீதியெங்கும்  ரத்த  வெள்ளம் உயிரோடு கடைசி போராட்டம் அதிர்ச்சியில்  உறைந்த  முகங்கள் எங்கும் ஒப்பாரிக்  கதறல்கள் இனியொருமுறையும் என்னுலகு வேண்டாம் . கலைந்து  மேகங்களுடன் மிதந்து  வரும்  தென்றல் பசுமையின்  கொஞ்சலில் பறந்து திரியும் பறவைகள் ஜாதி  மத பேதமற்ற மழலை மொழி ரகசியங்களை  கிசுகிசுக்கும் தெளிந்த நீரோடை பகையற்ற பரிவுடன் என் மனசு தேடிக்  கொண்டிருக்கிறது  எப்போதும் ஆர். ஆல்பன்      

தேடல்

யாரிடமும் சொல்லாமல் மௌனமாய் தேடுகிறேன் வார்த்தைகளின் அர்த்தங்களை ... தோல்வியின்  அனுபவங்களை மனசுக்குள்  இருத்தி வெற்றியின் ரகசியங்களை வெளிக் காட்டாமல் தொடர்கிறது என்  லட்சியத்துக்கான   தேடல் . ஆசைகள்  ஒதுக்கி புரட்சிப்  பாதைக்காக தடைகளை  விலக்கி முன்னேறிக்  கொண்டே தீபத்தின்  ஒளியில் இருட்டை விரட்டியபடி   நம்பிக்கையுடன்  தேடுகிறேன் நாளைய  நாட்களை . ஆர். ஆல்பன் 

கனவுகள் நிலைப்பதில்லை

கலையும்  கனவுகளாய் கண்ணெதிரே  மேகங்கள் . சொக்கச்  சுமையுடன் ஓயாமல்  தாலாட்டும் அலை கட்டிய வீட்டை கலைத்  தெறினும்  தொடரும் நண்டுகளின்   நொண்டி  பயணம் உப்பு  நீரில் விழி  மீன்கள் . நித்திரை  இரவுகளில் நிம்மதி  இல்லாமல்  சொக்கி திரியும்  திரியும் மனங்கள். நாளைய  நம்பிக்கையுடன் நிமிரும் மனங்கள் எத்தனையோ . ஆர்.ஆல்பன் 

கண்ணீரும் கைய்யூமாய் ...

மூத்த மகளுக்க கல்யாணம்  முடிஞ்ச  மறுவருஷம் முதல்  கைக்குழந்தையுடன் வந்து  நிக்கியா  வீட்ல... கண்  காணாத பிறவி குருடியுமாய்  இருக்கும் ரெண்டாவது மகளை கெட்டிக்  கொடுக்காத  வீட்ல ... குடும்ப  தகராறில் வெட்டு குத்து  குலவாதவுமாய் மாப்பிள்ளை  செத்து கடைசி  மகளும்   வேற  வழியில்லாத  எனக்க  வீட்ல... கழுத்தில  முடிச்சு  போட்டவன் கண் மூடின பெறவு கருவாடும் மரக்கறியும் கடவம்  கணக்கில  செமந்து வளத்திய  பிள்ளியளோடு எழிச்சு  நடக்க ஏலில்லாம நானும்  கெடக்கியன் பூமிக்கு  பாரமாய்  என்ன வீட்ல ... ஆர். ஆல்பன்