பரிசல்
காற்றின் கைகளிலாடும் என் பயணங்கள் நிலையற்றதாகி விடுகின்றன . உதயங்களில்லாமல் போன வாழ்க்கையைப் போல கவிழ்க்கப் பார்க்கும் அலைகள் . கோபக் கூக்குரலிட்டுக் துரத்தும் திசையில் என் நினைவுகள் கலையும். நிழல் யாவும் மரக்கிளைகள் இல்லாமல் போன கரையில் நீந்தி களைத்து கரையேற ஒரு குடை தன் தலை மறைத்தவாறு பக்கம் வருகிறது . ஆர்.ஆல்பன்